போட்டோ எடுத்தல் எனது பொழுதுபோக்குகளில் ஒன்று.
நான் வெவ்வேறு இடங்களிற்கு கமராவைத் தூக்கிச் சென்று படம் எடுக்கும் ஒரு தொழில்முறைப் படப்பிடிப்பாளன் இல்லை.
ஆனால் எங்கேயாவது வெளியே செல்லும் போது இரசிப்பபவற்றை படம் பிடிப்பது வழமை. நான் எடுத்த படங்களில் வித்தியாசமான ரசிக்கக்கூடிய ஒரு சிலவற்றை இங்கு இணைத்துள்ளேன். அத்துடன் புகைப்படம் எடுக்கப்பட்ட சூழ்நிலையையும் குறிப்பிட்டுள்ளேன்.
நான் வெவ்வேறு இடங்களிற்கு கமராவைத் தூக்கிச் சென்று படம் எடுக்கும் ஒரு தொழில்முறைப் படப்பிடிப்பாளன் இல்லை.
ஆனால் எங்கேயாவது வெளியே செல்லும் போது இரசிப்பபவற்றை படம் பிடிப்பது வழமை. நான் எடுத்த படங்களில் வித்தியாசமான ரசிக்கக்கூடிய ஒரு சிலவற்றை இங்கு இணைத்துள்ளேன். அத்துடன் புகைப்படம் எடுக்கப்பட்ட சூழ்நிலையையும் குறிப்பிட்டுள்ளேன்.
(1)
இந்த புகைப்படம் திருகோணமலை புறநகர்ப் பகுதியில் பின்மாலை நேரத்தில் எடுக்கப்பட்டது. இங்கு சாதாரணமாக வீதியோரங்களில் மான்களைக் காணமுடியும். அவை மனிதர்களுடன் பழக்கப்பட்டுவிட்டதால் மனிதர்களைக் கண்டு விலகுவதில்லை. திருகோணமலை நகரின் சாலைகளில், "மான்கள் நடமாடும் இடம், வாகனங்களை மெதுவாக ஓட்டவும்" என்ற அறிவித்தல் பலகைகளை இடையிடையே காணமுடியும்..
(2)
இந்தப் புகைப்படம் யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவில் சூரியன் மறையும் நேரத்தில் எடுக்கப்பட்டது. நீண்ட தூர இடைவெளியைக் கொண்ட இரண்டு பனைமரங்கள். அந்தப் பிராந்தியம் வெட்டவெளியாக காணப்பட்டதால் இரு மரங்களுக்கும் இடையில் வேறு மரங்கள் காணப்படவில்லை. சூரியன் மறைந்த பின் வானத்தின் வர்ணத்தினை பின்னணியாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது.
(3)
இது யாழ்ப்பாணம் நயினாதீவு நாகவிகாரையிலுள்ள தாதுகோபங்களில் ஒன்று. புத்தர் இலங்கைக்கு விஜயம் செய்த போது நயினாதீவுக்கும் வருகை புரிந்தார் எனக் கூறப்படுகிறது. இந்த நாகவிகாரைக்கு இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பௌத்த யாத்திரீகர் பலர் வருவார்கள். இப்பிரதேசத்திற்கு வருவதற்கு தரைவழி மார்க்கம் ஒன்றுமில்லை. கடற்பயணம் தான் ஒரே வழி.
(4)
இது நெடுந்தீவுக் கடலில் எடுக்கப்பட்ட படம். கரையிலிருந்து இருபது மீற்றர் தூரத்தில் கடலினுள் உள்ள பாறை மீது இந்த நண்டு இருக்கிறது. நண்டின் ஒரு பகுதி பாறையிலும் மறுபகுதி நீரிற்குள்ளும் உள்ளது. இந்த நண்டு வித்தியாசமான பச்சை நிறத்தில் இருந்தது.
(5)
இவை திருகோணமலை கன்னியா பிரதேசத்திலுள்ள வெப்பநீரூற்றுக்கள். இங்கு எட்டு நீரூற்றுக்கள் உள்ளன. ஒவ்வொரு நீரூற்றும் தொட்டி போன்ற அமைப்பில் இருக்கிறது. எட்டு தொட்டிகளிலும் வெவ்வேறு வெப்பநிலைகளில் கொதிநீர் உள்ளது. ஆனால் அந்தப் பிரதேசத்தில் ஏனைய இடங்களிலுள்ள கிணறுகளில் சாதாரணமான வெப்பநிலை நீர் தான் உள்ளது.
தொடரும்..